மயிலாடுதுறை, மார்ச் 16: சத்தியவான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க ஆறுபாதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே 7 கி.மீ தூரத்தில் உள்ளது ஆறுபாதி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக தான் சத்தியவான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுக்கு முன் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டது, இதுகுறித்து பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜிடம் பலமுறை எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.