அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

க.பரமத்தி, மார்ச் 16: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மொஞ்சனூர் இளங்கோ தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அறிமுக கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கருணாநிதி தலைமை வகித்து பேசினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் சேகர் (எ) குணசேகர், மணியன், ரகுநாதன், மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு முக்கிய நிர்வாகிகள் பலரும் வாழ்த்தி பேசினர்.

திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் கிராமங்கள் தோறும் மினிபேருந்து வசதி, உழவர் சந்தை, 108 ஆம்புலன்ஸ், விவசாய கடன்தள்ளுபடி, இலவச டிவி, அனைவருக்கும் இலவச எரிவாயுஅடுப்புடன் கொண்ட இணைப்பு வசதி, கலைஞர் காப்பீட்டுதிட்டம் என எண்ணற்ற மேம்பாலங்கள், தொகுப்பு வீடுகள், மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடுகள், ஏழை, எளியோருக்கு ஒரு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இப்படி எண்ணற்ற திட்டங்கள் இன்றும் மக்கள் நினைவில் நிலைத்து நிற்கின்றன. எனவே ஏழை எளியோருக்காக அயராது பாடுபடும் ஒரே ஆட்சி திமுகதான். மேலும் சொன்ன வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றும் ஒரே ஆட்சி திமுகதான் என பேசினார்.

Related Stories: