×

சட்டப்பேரவை தேர்தலுக்காக திருச்சூர் பாஜ அலுவலகத்திற்கு 17 மூட்டைகளில் பணம் வந்தது: முன்னாள் பாஜ நிர்வாகி பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: பாஜவின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா திருச்சூர் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர் அக்ஷய். இவர் திருச்சூர் மாவட்ட பாஜ அலுவலக செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் அக்ஷய் நேற்று திருச்சூரில் நிருபர்களிடம் கூறியது: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சூர் பாஜ அலுவலகத்திற்கு 17 சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் வந்தது.

இதில் ரூ.25 கோடிக்கு மேல் பணம் இருந்தது. இந்தப் பணம் முழுவதும் திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இங்கிருந்து பெருமளவு பணம் தமிழ்நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட ஒரு பொலீரோ காரில் இந்தப் பணம் அனுப்பப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பாஜ முன்னாள் நிர்வாகி வெளியிட்டுள்ள இந்தத் தகவல் கேரள பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : THIRUCHUR BAJA ,OFFICE ,FORMER ,Thiruvananthapuram ,Akshay ,Yuvamorcha Thiruchur ,Baja ,Tiruchur District Baja Office ,Thrissur ,
× RELATED முதல்வர் அலுவலக அறிக்கைகள் மாயம்...