திருவனந்தபுரம்: கட்டிட அனுமதி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்குவதில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறியும் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் முழுவதும் உள்ள 68 உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. ‘ஆபரேஷன் பார்ப்பிடம்’ என்று பெயரிடப்பட்ட இந்த மாநில அளவிலான நடவடிக்கை 6 மாநகராட்சிகள், 30 நகராட்சிகள் மற்றும் 24 கிராம ஊராட்சிகளில் நடந்தது.
