புழல், மார்ச் 16: புழல் கதிர்வேடு பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
புழல் கதிர்வேடு 25வது வார்டில் சீனிவாச நகர், பாபுஜி நகர், அம்பேத்கர் நகர், ரங்கா அவென்யூ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இதில், சீனிவாச நகர் பகுதியில், மதுரவாயல் - புழல் பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலை அருகே பூங்கா அமைக்க அரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான அறிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி குப்பை வண்டிகளை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணியை அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள்.