வேட்டவலம், மார்ச் 15: வேட்டவலம் அருகே ஆவணங்கள் இல்லாததால் சென்னை வாலிபர்கள் 2 பேரிடம் இருந்து ₹2.22 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கூட்ரோட்டில், கீழ்பென்னாத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயப்பிரகாஷ், எஸ்எஸ்ஐ முத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டீக்கடையின் அருகே நின்றிருந்த 2 பேர் பணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த புருஷோத்தமன்(39), சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலையை சேர்ந்த தீனதயாளன்(38) என தெரியவந்தது.