மார்ச் 15: திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளை மேலாளருக்கு கட்டிமேடு சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் அனுப்பி உள்ள கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டியிலிருந்து பாண்டி, கீழப்பெருமழை வழியாக இடும்பாவனம் பகுதிக்கு 1977ம் ஆண்டு முதல் காலை 6.30, 9.15, மதியம் 12.30, 3.30, மாலை 6.30, இரவு 9.30 மணி நேரங்களில் டவுன் பஸ்சாக இயங்கி வந்தது. பின்னர் புறநகர் பஸ்சாக மாற்றி இதே நேரங்களில் இயங்கிவந்தது. ஆனால், இப்போது காலை, மாலை இரண்டு வேளை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல் இடும்பாவனத்திலிருந்து திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு இரண்டு முறை பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் திருத்துறைப்பூண்டியிலிருந்து பெத்தல கோட்டம் பகுதிக்கு காலை, மாலை, இரவு என 3 முறை சென்ற பஸ் தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.