கூடலூர் : கூடலூரை அடுத்த மேல் கூடலூர் பகுதில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சர்புதீன் (38). என்பவரை கைது செய்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 8 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
