கரூர், மார்ச் 15: கரூர் வெங்கமேடு அருகே குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையை இந்த பகுதி மக்களே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில், பெரும்பாலான தெருக்கள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு விஜபிகள் வருவார்கள் என்பதால், கடந்த சில நாட்களாக நகராட்சி சார்பில் பள்ளமான பகுதிகளை தற்காலிகமாக சரி செய்யும் வகையில் வாகனங்களில் வந்து மண்களை கொட்டிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.