சங்கரன்கோவில் மார்ச் 14. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக தென்காசியை சேர்ந்த வக்கீல் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து நேற்று சங்கரன்கோவில் வந்தார். அவருக்கு திமுகவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர் சங்குபுரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். சங்கரன்கோவில் தொகுதியில் இம்முறை திமுக வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். சங்கரன்கோவில் மக்களின் நீண்டநாள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி தொழிலை முன்னேற்றும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்வேன். வாரம் ஒருமுறை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார்.