காளையார்கோவில், மார்ச் 14: காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பல வழக்குகளில் பிடிபட்ட நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் விஷபூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது என்று பகுதி மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பல வழக்குகளில், பிடிபட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதினால் கொடிய விஷப்பூச்சிகள் அதிகளவு திரிகின்றன. காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.