திருவண்ணாமலை, ஜூலை 9:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி பிரமோற்சவ விழா. தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி, கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில், காலை 6 மணி அளவில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கினர்.
