பரமக்குடியில் ஆலோசனை கூட்டம்

பரமக்குடி, மார்ச் 11: சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி பரமக்குடி டிஎஸ்பி தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள், விதிகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும்,அமைதியான முறையில் நடத்துவது என உறுதி செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பாக நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, அண்ணாமலை, அதிமுக சார்பாக நகர செயலாளர் கணேசன் உள்பட அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: