துப்பாக்கியுடன் ரவுடி கைது

மதுரை, மார்ச் 11: மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.மறைவான இடத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள், இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் 4  பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றைப் பதுக்கி வைத்திருந்ததாக, பிரபல ரவுடி பச்சைகறி சவுந்தரை கைது செய்தனர். அவர் மீது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: