பெரம்பலூர், மார்ச் 10: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார் பாக சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப் பட்டது. இதில் வேந்தர் சீனிவாசன் பங்கேற்றார்.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை கல்வி நிறுவன வளாகத்திலுள்ள கூட்ட அரங்கத்தில் நடை பெற்றது. தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் துணை முதல்வர் கஜலட்சுமி வரவேற்றார். இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவரும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சீனிவாசன் தலை மையேற்று மகளிர் தின விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் அனந்த லட்சுமி கதிரவன் கலந்து கொண்டு பெண்களின் பெ ருமையைப் போற்றிப்பேசி னார். மேலும் இக்காலச் சூ ழலுக்கு தற்காப்புகலை பெண்களுக்கு அவசியம் எனவும் கூறினார்.