சாத்தூர், மார்ச் 9: சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அம்மாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராமலிங்கபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணனின் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.