பெரம்பலூர்,மார்ச் 9: பெரம்பலூரில் தனியார் மருந்தக குடோனில் பூட்டை உடை த்து 1 லட்சம் மதிப்பிலான பணம், செல்போன் உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இங்குள்ள சிசி டிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சிவநேசன்(56). இவர் பெரம்பலூரில் வெங்கடேசபுரம் பகுதியில் மருந்தக குடோன் வைத்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மெடிக்கல் ஷாப்புகளுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகித்து வருகிறார். இந்த மருந்தக குடோனில் இளங்கோவன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு (7ம்தேதி) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை மேலாளர் இளங்கோவன் கடைக்கு வந்து திறந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.