வந்தவாசி, மார்ச் 9: வந்தவாசி அடுத்த தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன்கள் ஜானகிராமன், கன்னியப்பன், ஆறுமுகம்(42). இளைய மகன் ஆறுமுகம் வந்தவாசி வெண்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு அவரது தந்தை, 3 சென்ட் வீட்டுமனை கொடுத்ததாக தெரிகிறது. இந்த வீட்டுமனையை தனது மனைவி பரமேஸ்வரி பெயரில் ஆறுமுகம் பத்திரப்பதிவு செய்து கொண்டாராம். இதனையறிந்த ஜானகிராமன், கன்னியப்பன் இருவரும், ‘எங்களுக்கு தெரியாமலேயே தந்தையிடம் வீட்டுமனை வாங்கிக் கொண்டாயே. எங்களுக்கும் கொடுக்க வேண்டும்’ எனக்கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.