புதுக்கோட்டை , மார்ச் 8: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. மாரியம்மனுக்கு எல்லாம் முதன்மை மாரியாக விளங்கி வருவது திருவப்பூர் முத்துமாரியம்மன். இந்த முத்துமாரியம்மன் கோயிலின் மாசி மகத் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதனையடுத்து தினமும் மாரியம்மனின் வீதிஉலா நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.