கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி

கரூர், மார்ச். 8: கரூரில் கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை அதிகாலை நேரத்தில் பனியும், பகல் நேரங்களில் லேசான அளவில் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் அக்னி நட்சத்திர வெயிலுக்கு நிகராக வெயில் வாட்டி வதக்கி வருகிறது.இந்த அனல் பறக்கும் வெயில் காரணமாக சிறுவர் முதல் பெரியவர் வரை மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மார்ச் மாத துவக்கத்திலேயே இந்தளவுக்கு வெயில் அதிகளவு அடித்து வருவதால் வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories: