மணல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 8: பர்கூர் போலீஸ் எஸ்ஐ பச்சமுத்து மற்றும் போலீசார், பர்கூர்-மத்தூர் சாலையில் உள்ள சக்கில்நத்தம் பஸ் நிறுத்தம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து, லாரியை சோதனை செய்ததில், அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் காக்கங்கரை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Related Stories: