காளையார்கோவில், மார்ச் 8: காளையார்கோவில் தற்காலிக வாரச்சந்தையில் வெளியூர் மற்றும் உள்ளுர் வியாபாரிகள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வந்து வியாபாரம் செய்வார்கள். அவர்கள் பயன்படுத்தும் தராசில் எடை அளவு குறைவாக உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். காளையார்கோவில் வாரச்சந்தைக்கு உள்ளுரில் இருந்தும் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள். இங்கு மீன், காய்கறி, பழங்கள் என அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன. சில வியாபாரிகள் விற்பனை செய்யும் பொருட்களின் எடை ஒரு கிலோவுக்கு 200 கிராமுக்கு மேல் குறைவாக எடைபோடுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளார்கள்.