பழநி, மார்ச் 8: டாஸ்மாக்கில் கூடுதலான அளவில் மது விற்பனை செய்யக்கூடாதென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. நடத்தை விதி எனக்கூறி அனைத்து தரப்பினருக்கும் ஆப்பு வைத்து வரும் தேர்தல் ஆணையம் டாஸ்மாக்கிற்கும் வரைமுறை வகுத்துள்ளது. இதன்படி ஒரு நபருக்கு அதிகபட்சம் மொத்தமாக 5 குவாட்டருக்கு மேல் விநியோகிக்கக் கூடாது. மொத்த விற்பனை செய்யக் கூடாது. விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என்பது போன்ற வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.