பஞ்சாப், அரியானாவில் 18 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: கடந்த 2025ம் ஆண்டு ஜலந்தரில் சமூக வலைதள பிரபலமான ரோஜர் சாந்து என்பவர் வீட்டிற்கு அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. 2025நவம்பரில் அரியானா, சிர்சாவில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. கடந்த ஜனவரி மாதம் அம்பாலாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த கண்டுவெடிப்பு சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஷெசாத் பட்டியின் தூண்டுதலின்படி ரவுடி கோஷ்டிகளை சேர்ந்தவர்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில்,3 வழக்குகள் தொடர்பாக பஞ்சாப்,அரியானாவில் உள்ள 9 மாவட்டங்களில் 18 இடங்களில் என்ஐஏ நேற்று தீவிர சோதனை நடத்தியது. இதில், தகவல் தொடர்பு வலையமைப்புகள், நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணங்கள் சிக்கின.

Related Stories: