தூத்துக்குடி, மார்ச் 7: மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி நெல்லையில் நடந்தது. இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியானது, பிவி, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என அனைத்து வயது பிரிவுகளிலும் நடைபெற்றது. போட்டியின் முடிவில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் சிவஅகல்யா, கோமுபிரியா ஆகியோர் தங்கப்பதக்கமும், தர்ஷினி வெள்ளிப்பதக்கமும், சிவமுகல்யா, முத்துச்செல்வி, மரிய மனிஷா, மரிய மோனிகா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். பெல் மெட்ரிக் பள்ளி ஜெசிகா வெள்ளிப்பதக்கமும், ஜெரின் மைக்கேல், மகாராஜா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.