சூளகிரி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டெம்போ தீப்பிடித்து எரிந்தது

சூளகிரி, மார்ச் 7:சூளகிரி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற மினி டெம்போ தீப்பிடித்து எரிந்தது. சூளகிரி முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சாதிக்(37). இவர் கும்பளம் பகுதியில் இருந்து கால்நடைக்காக வைக்கோலை தனது மினி டெம்போவில் ஏற்றிக் கொண்டு நேற்று சூளகிரிக்கு வந்தார். டெம்போவை அதே பகுதியை சேர்ந்த அண்ணுர்(32) என்பவர் ஓட்டி வந்தார். சூளகிரி அருகே வந்தபோது அதிக வெயில் காரணமாக டெம்போ இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. தீ வைக்கோலில் பரவி கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த இருவரும் டெம்போவை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் மினி டெம்போ முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: