கோவில்பட்டி, மார்ச் 6: கோவில்பட்டி மின்விநியோக செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கழுகுமலை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கழுகுமலை, குமாரபுரம், கரடிகுளம், வேலாயுதபுரம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி மற்றும் குருவிகுளம் பகுதிகளில் இன்று (6ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதேபோல் விஜயாபுரி உபமின்நிலையத்திற்குட்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, துறையூர், காமநாயக்கன்பட்டி, கசவன்குன்று ஆகிய பகுதிகளிலும், எம்.துரைசாமிபுரம் உபமின்நிலையத்திற்குட்பட்ட வானரமுட்டி, காலாங்கரைபட்டி, குமரெட்டியாபுரம், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி உள்ளிட்ட ப-குதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், செட்டிகுறிச்சி மற்றும் சன்னதுபுதுக்குடி உபமின்நிலையத்திற்குட்பட்ட செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, வெள்ளாளன்கோட்டை, ராஜாபுதுக்குடி, டிஎன்.குளம், ஆத்திகுளம், தெற்குஇலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்டம்: வைகுண்டம் மின்வாரிய துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: