திண்டுக்கல், மார்ச் 6: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: வங்கிகளில் தனிநபரின் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக பணம் பரிவர்த்தனை குறித்து தினசரி அறிக்கையினை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணக்கு பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டும் சந்தேகத்திற்கு இடமான பணவரவு குறித்தும் தகவல் அளிக்க வேண்டும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் கூடுதலாக பணம் எடுப்பவர்களின் தகவல்களை அளிக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைக்க வாகனங்களில் கொண்டு செல்லும் போது, அந்த தொகைக்குரிய சரியான விபரங்கள் வங்கிகள் அளிக்க வேண்டும். அதனை கொண்டு செல்லும் முகவர்களின் முழு தகவல்கள் மற்றும் வாகனங்களின் எண்கள் குறித்த விபரங்களை தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.