காரைக்கால், மார்ச் 5: சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 7 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி காரைக்காலில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வந்தனர். இவர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 7 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று காரைக்கால் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.