திருச்சி, மே 26: திருச்சியில் ஆர்ப்பாட்டத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனிதர்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, மூடநம்பிக்கை பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவருக்கு காரணமான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலை முன் நேற்று பொதுச் செயலாளர் கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
