மதுரை, மார்ச் 4: மதுரை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்ததாக தாசில்தார், பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(45). இவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், ``இதே ஊரில் உள்ள எனக்கு சொந்தமான ஆறரை சென்ட் இடத்தை, இதே ஊரை சேர்ந்த சமயன் மகன்கள் சீனி, இளையசாமி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து, தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.