திருவல்லிக்கேணி பகுதியில் வங்கி உதவி மேலாளர் பைக் திருட்டு

சென்னை, மே 25: சென்னை திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டின் முன்பு தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பைக்கை பார்த்த போது, பைக் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து ரமேஷ் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, பிரபல கொள்ளையனான அதே பகுதியை சேர்நத் பெரோஷ் பாஷா (40) பைக்கை திருடியது தெரியவந்தது.

இவர் மீது திருட்டு உள்ளிட்ட 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், திருடிய பைக்குகளை பழைய உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு குறைந்த விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கொள்ளையன் பெரோஷ் பாஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related Stories: