வாக்குச் சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

விருதுநகர், மார்ச் 3:விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டமன்ற தொகுதிகளில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடர்பாக கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். புதிய வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிட, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: