அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்!

சென்னை: அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பிலான இருவழிப்பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்தால் சென்னை செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்களில் கூட்டநெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால் புறநகர் ரயில் போக்குவரத்து நெரிசல், தாமதம் ஏற்படுகிறது.

Related Stories: