குளித்தலை, மார்ச் 3: குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இதனால் பால ஓர தடுப்புசுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை திருச்சி மெயின் ரோட்டில் பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் பாலம் ஒன்று இருக்கிறது இந்த வாய்க்கால் பாலத்தின் வழியாகத்தான் குளித்துறை நகரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் புறவழிச்சாலை சென்று திருச்சி டோ கரூர் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் நகர மையப்பகுதியில் இறந்தவர்கள் உடலை இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்துச் சென்று காவிரி கரைக்கு செல்வது வழக்கம்.