குழாய் உடைந்து சாலையில் ஓடும் கழிவு நீர்: சோழிங்கநல்லூரில் போக்குவரத்து நெரிசல்

 

சென்னை: சோளிங்கநல்லுர் – பழைய மாமல்லபுரம் சாலையில் குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் கழிவு நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் செயல்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் கழிவு நீர் குழாய் உடைந்து கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அதேபகுதியில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே கட்டுமான பணிகள், இரும்பு தடுப்புகள், உள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள், மெட்ரோ குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய இதுவரை முயற்சி செய்யவில்லை. இதனால் உடனே சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: