தேவதானப்பட்டி பகுதியில் அதிவேகத்தில் பறக்கும் ஆட்டோக்கள்

தேவதானப்பட்டி, மே 14: தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் மேட்டுவளவு, அரிசிக்கடை, பஸ் ஸ்டாண்ட், காட்ரோடு, சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் ஒரு சில ஆட்டோக்களை தவிர, பெரும்பாலான ஓட்டுனர்கள் அதிவேகத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன. இதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது சிலர் ஒருவரை ஒருவர் முந்திச்செல்கின்றனர். இதனால் எதிரே வரும் மற்ற வாகனங்களும் விபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த அதிவேக ஆட்டோக்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ‘எனவே போக்குவரத்து போலீசார் தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் பகுதிகளில் அதிவேக ஆட்டோக்களை கட்டுப்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்wwதுள்ளனர்.

 

 

Related Stories: