தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி பிரபாகர்

சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், தவெக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இவர் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர், நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறார்.

சபாநாயகர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Related Stories: