கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் அரை கி.மீ இடைவெளியில் 2 இளைஞர்கள் எரித்துக் கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி என்ற கிராமத்தில் அரை கி.மீ இடைவெளியில் இரு இளைஞர்களின் சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்களும் ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது. இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் இரு இளைஞர்களும் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. வேறு எங்கோ கொலை செய்து சடங்களை வீசி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: