கிருஷ்ணகிரி, பிப்.26: வேப்பனஹள்ளியில், கடனை திருப்பி கேட்ட வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கார்பென்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பனஹள்ளி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சசி(21). இவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டரான நூர்பாய்(34) என்பவருடன் சசிக்கு பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நூர்பாய், சசியிடம் ₹500 கடனாக பெற்றுள்ளார். உடனடியாக தருவதாக கூறி சென்ற நூர்பாய், அந்த பணத்தை கொடுக்கவில்லை.