ராஜாக்கமங்கலம் யூனியனில் 3 பணியிடத்துக்கு 1950 பேர் விண்ணப்பம்

ஈத்தாமொழி, பிப்.26: ராஜாக்கமங்கலம்  பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் ஒருவர், அலுவலக  உதவியாளர் 2 பேர் என காலியாக இருந்த 3 பணியிடங்கள் நிரப்பப்படும் என  அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 11ம்  தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் எழுத்தர் பணிக்கு 1081 பேர்,  உதவியாளர் பணிக்கு 869 பேர் என 1950 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  இவர்களுக்கான நேர்காணல் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2வது நாளாக நேற்றும் நேர்காணல்  நடந்தது.

Related Stories: