கறம்பக்குடி, பிப்.25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன், கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து விட்டு பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளத்தை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.