விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.25: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (26ம் தேதி) காலை 10.30 மணியளவில், வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இக்குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: