நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி வரை கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறை மற்றும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தில் மொத்தம் 18,262 சிறப்பு ரயில் பயணங்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தில், இதுவரை 11,878 பயணங்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரயில் சேவைகளும் பயணிகளின் தேவையைப் பொறுத்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பெட்டிகளின் இருப்பை அதிகரித்தல், பயண நேரத்தை மேம்படுத்துதல் மற்றும் தொடர் கண்காணிப்பு போன்ற நுணுக்கமான திட்டமிடல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முக்கிய வழித்தடங்களில் நிலவும் கடும் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மெகா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories: