மயிலாடுதுறை, பிப்.24: மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நலைப்பள்ளியில் மாணவர்கள் அமருவதற்கு பெஞ்ச் வசதி இல்லாமல் உள்ளனர். இதற்கு உடனே நடவடிகை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்னாள் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோரிகை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணல்மேடு பேரூராட்சியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேநிலைப்பள்ளி உள்ளது, இதில் ஆண்கள் மேல்லைநப்பள்ளியில் 478 மாணவர்கள் பயிலுகின்றனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பெஞ்ச் மற்றும் டெஸ்க் வசதி உள்ளது. மீதி இருக்கின்ற பெஞ்ச் டெஸ்க்குகள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் மாணவர்களை தரைலயில் அமர வைத்து பாடம் நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.