தரங்கம்பாடி அருகே விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி சாவு

மயிலாடுதுறை, பிப்.24: தரங்கம்பாடி அருகே உள்ள பெருங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் பாபு (40). பைக் மெக்கானிக். இவரது மனைவி விஜயராணி (35). இவரும் கடந்த சில தினங்களுக்கு முன் பைக்கில் தெக்கிருப்பு பகுதிக்கு சென்றார். நீலவெளி என்ற இடத்தில் சென்றபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி ஏறும்போது, பைக் பின்னால் அமர்ந்திருந்த விஜயராணி தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தார். இதனால் தலையில் பலத்த அடிபட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: