கரூர், பிப். 24: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட கிளையை சேர்ந்த 126பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் தமிழ்மணி தலைமையில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோரிக்கைகைளை நிறைவேற்றக் கூறி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.