மனைவி உடல்நிலை சரியில்லாமல் அவதி கணவன் தூக்கிட்டு தற்கொலை

கரூர், பிப். 24: கரூர் மாவட்டம் புலியூர் அருகே மனைவி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படுவதை பார்த்து கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் புலியூர் அடுத்துள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் குரு(46). கொத்தனராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட குரு, வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப் போட்டு தொங்கினார். ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: