சின்னசேலம், ஏப். 23: சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் அருகே பரிகம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசேகர்(47). இவரது மனைவி இளவரசி(34). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சத்தியசேகர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சத்தியசேகருக்கு நேரம் சரியில்லை என்று கடந்த 3 மாத காலமாக பங்காரம் கிராமத்தில் உறவினர் வீட்டில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர். கடந்த 21ம் தேதி இரவு சத்தியசேகர் தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு, பைக்கில் பரிகம் கிராமத்தில் உள்ள தனது தந்தையை பார்க்க பங்காரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக கச்சிராயபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். காரனூர் ஓம்சக்தி கோயில் அருகே சென்றபோது, எதிரில் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் ஓட்டிவந்த பைக்மோதியதில் சத்தியசேகர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி இளவரசி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
