புனேயில் இறந்த மதுரை ராணுவ அதிகாரி உடல் நல்லடக்கம்

திருப்பரங்குன்றம், பிப். 24: திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர் (44). இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பொறியியல் பிரிவில் ஜுனியர் கமாண்டிங் ஆபீசராக பணியாற்றி வந்தார். கடந்த 20ம் தேதி இவர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1995ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் 26 ஆண்டுகளாக சர்வீஸில் இருந்துள்ளார். இவருக்கு முனிரா பானு என்ற மனைவியும், முசினா பானு (19) என்ற மகளும், முன் தசீர் (13) என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக நேற்று மாலை 3 மணியளவில் விளாச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் தேசிய மாணவர் படை 7வது பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் 3வது பொறியியல் பிரிவு ஆகியோர் அணி வகுப்பு மரியாதை செலுத்திய பின் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

Related Stories: